உன்னோட இந்த காமெடி தான்


மனைவி : எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன?
அழகான முகமா? 
அன்பான மனமா?
பணிவான குணமா?
கணவன் : "உன்னோட இந்த காமெடி தான்..!!"

--------------------------------------------

கணவன் : "கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?"
மனைவி : "ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?"
கணவன் : "இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்"

--------------------------------------------

மனைவி : "பாவி மனுசா.. இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா? பாக்க பிச்சைக்காரி மாதிரி இருக்கா?!"
கணவன் : "தூக்கத்துல கண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி சனியனே..!"

--------------------------------------------

கணவன் – "வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது"
மனைவி – "அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?"
கணவன் – "வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்"
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....

--------------------------------------------

மனைவி: "பின்னாடி figure இருந்தா கண்ணு தெரியாதான்னு லாரிகாரன் திட்டிட்டு போறான்... நீங்க சிரிக்கிறீங்க?"
கணவன்: "உன்னை பொய் Figureன்னு சொல்றான், அவனுக்கு தான் கண்ணு தெரியல.. அத நெனச்சித்தான் சிரிக்கிறேன்.."

--------------------------------------------

மனைவி : "என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?"
கணவன் : "டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.."

--------------------------------------------

புருஷனுக்கும் புடவைக்கும் என்ன வித்தியாசம்?
"புடவைய தொவச்சிட்டு கட்டனும்.. 
புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!"

No comments:

Post a Comment