இசை :
எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியோர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
பல்லவி
பார்த்துப் பார்த்து
கண்கள் பூத்திருந்தேன்
நீ வருவாய் என!
பூத்துப் பூத்து
புன்னகை சேர்த்திருந்தேன்
நீ வருவாய் என!
தென்றலாக நீவருவாயா?
ஜன்னலாகிறேன்!
தீர்த்தமாக நீவருவாயா?
மேகமாகிறேன்!
வண்ணமாக நீவருவாயா?
பூக்களாகிறேன்!
வார்த்தையாக நீவருவாயா?
கவிதை ஆகிறேன்!
சரணம் 1
கரைகளில் ஒதுங்கிய
கிழிஞ்சல்கள் உனக்கென
தினம்தினம் சேகரித்தேன்.
குமுதமும் விகடனும்
நீபடிப்பாய் என
வாசகன் ஆகிவிட்டேன்.
கவிதை நூலோடு
கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்!
கனவில் உன்னோடு
என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்!
ஒரு காகம் காவென
க ரைந்தாலும்
உன் வாசல் பார்க்கிறேன்!
சரணம் 2
எனக்குள்ள வேதனை
நிலவுக்கு தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள்
உனைவந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம்
நூறு கோடியாம்
அதிலே நீயாரடி?
சருகாய் அன்பேநான்
காத்திருக்கிறேன்
எங்கே உன்காலடி?
மணி சரி பார்த்து
தினம் வழி பார்த்து
இருவிழிகள் ஏங்குது
No comments:
Post a Comment