"இயற்கை வைத்தியம்"



மிளகுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட "சளி" போகும்.

சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் தடவ "மூட்டுவலி" குறையும்.

கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட "மெலிந்த உடல் பருக்கும்".

இருமல்" வந்தால் கடுகை பட்டு போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட "இருமல்" குணமாகும்.

இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த "காலரா" குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.

கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட "மூலம்" தீரும்.

ஒரு டம்ளர் கொதி நீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் "வயிற்று வலி" பறந்துவிடும்.

வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, "வயிற்றின் சுற்றளவு குறையும்".

முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் "உடல் அசதி குணமாகும்".

காய்ச்சிய பசும் பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் "இருமல்" குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் "மறதி தொல்லை" மறைந்து விடும்.

சாப்பிடும் முன் இள நீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்ட பின் அருந்தினால் "பித்தம் நீங்கும்" மலச்சிக்கல் தீரும்.

துவரம் பருப்பை வேக வைத்த தண்ணீரை 1 டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட "பூச்சிகள் வெளியேறும்".

தொண்டை கட்டிக்கொண்டு "குரல் எழாமல் சிரமப்படுபவர்கள்" கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.

உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் "இருமல்" நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் "இருமல்" குணமாகும்.


வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் "சளித்தொல்லை" குணமாகும்.

No comments:

Post a Comment