மனதை வருடும் காதல் கவிதைகள்



கோலமிட்டு வாசலை
அழகாக்குகிறாய்,
விரலால்
கோதிவிட்டு கூந்தலை
அழகாக்குகிறாய்,
பிறகு ஏனடி
என்னை மட்டும்
வாடவிட்டு
அலைக்கழிக்கிறாய்??
விண்ணைத்தாண்டி
வாடி என்னவளே.....
சாபமிட அல்ல,
என் வீட்டு
வாசலில் கோலமிட

***

நீ கேட்காமல்
என்னை உன்னிடம்
தந்தேன்...!
நீ கேட்டால்
உன்னை உன்னிடம்
தர முடியுமா
தெரியவில்லை...!

***

பாசம் வைத்த எல்லோரும்
பாதியில் விட்டு சென்றது போல்
நேசம் வைத்த நீ என் நெஞ்சோடு
முள்ளை தைத்தது ஏன்..?
நேசம் எனும் வேசம் போட்டு
என்னை நோகடித்தது ஏன்..??

***

நமக்கே தெரியாமல் நம்
மீது அக்கரை கொள்வதும்
கோபங்களின் போது முகத்தில்
பேசி விடுவதும்
நம்மை உன்மையாக நேசிப்பவர்கள்
மட்டுமே..

***

திருமணம் ஆண்களின் வாழ்வில்
ஒரு நிகழ்வு!
பெண்ணின் வாழ்வில் ஒரு
மாற்றம்..
ஒரு மரத்தை வேரோடு பிடிங்கி
மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும்
விழா..!!

***

நீ உயிருக்கு உயிராக நேசித்த யார்
வேண்டுமானாலும்
உன்னை விட்டு பிரிந்து இருக்கலாம்
ஆனால்
உன்னை உயிராக நேசிக்கும் நான்
பிரிய மாட்டேன்... !!!
உன்னுடன் இருக்கும் வரை மட்டுமல்ல
உன்னை உயிராக நேசிக்கும் என் உயிர்
உள்ளவரை..!!!!.

***

நீங்கள் ரசிக்க என்னிடம்
அழகு இல்லை
ஆனால்
நீங்கள் வசிக்க என்னிடம்
அழகான இதயம்  இருக்கின்றது..

***

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய் ?
தரையை உடைத்து முளைக்கும்
போது
அன்பே என்ன செய்வாய் ?
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்குச் சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்..

***

எத்தனை
காலம் கடந்தாலும் .....
ஆயிரம் ஆயிரம் உறவுகள் ...
அழகழகாக தோன்றினாலும் ...
சிதையாத சிற்பம் -நீ ..!

***

நீ விரும்பும்
இதயம்
உன்னை தவிக்க விட்டு
செல்லும்போதுதான் - நீ
தவிக்க விட்ட
இதயத்தின்
வலி புரியும்.

***

ஒரு ஆணின் புன்னகைக்கும்
கண்ணீருக்கும் காரணம்
பெண்ணின் பாசம் மட்டுமே

***

உண்மையாக நேசிக்கும்
ஒவ்வொரு இதயத்திற்கு
பின்னாலும் ஒரு மிகபெரிய
வலி இருக்கும்...!
உண்மையாக நேசித்தல்
என்பது எல்லாரிடமும்
நிகழ்ந்து விடாது...
அப்படி நேசிப்பவர்களின்
மனதை காயபடுத்தும்
ஒவ்வொரு இதயமும்
கல்நெஞ்சம் கொண்டவர்கள் தான்...!
எங்கோ யாருக்கோ/ ஒரு துரோகிக்கோ
சொல்லும் பதில்கள் பல
இங்கு உண்மையாக
நேசிக்கும்
இதயத்திற்கு கிடைப்பதில்லை...!
இது கல்நெஞ்சத்தின் தலையெழுத்தா ?
அல்லது
உண்மையான இதயத்தின்
தலையெழுத்தா...?
நிச்சயமாக அந்த இதயத்தின்
வலிகளை அறிய
முடியாதவர்களால் அந்த இதயத்தின்
அன்பை
மட்டும் எப்படி உணர முடியும்??.

***

பூக்களெல்லாம்
பூக்கூடையிளிருந்து
தாவி குதித்து
தற்கொலை செய்ய
தயாரானது...
வீதி வீதியாக சென்று
பூ விற்ப்பவள்
விதவையான போது...

***

கணவன் தன்னையே ரசிக்க வேண்டும்
என்று
நினைப்பது பெண்களின்
புத்தி மனைவி தனக்கு மட்டுமே அழகாக
தெரிய
வேண்டும் என்று நினைப்பது ஆண்களின்
புத்தி

***

உள்ளுக்குள்ளே ஆசை வைத்தேன்...
சொல்வதற்கு தடை வைத்தேன்...
தெரியாமல் போனாலும்
கவலை இல்லையென...
கனவெல்லாம் காதல் செய்தேன்
நிஜத்தில் மட்டும் விலகி நின்றேன்...
சொல்லாமல் போனாலும்
கண்டுபிடித்தாய்...
கவிதையாய் காதலித்தாய்...
என்னைவிட அதிகம் நேசித்தாய் நீ
என்னை
என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்


No comments:

Post a Comment