இதயம் வருடும் காதல் கவிதைகள்




நான் என் மரணம்
பற்றி கவலை படுவதில்லை
ஆனால்
என் கவலை எல்லாம்
என் மரணத்திற்கு பிறகு
உனக்கு என் அளவு
அன்பு கொடுக்க
யாருமே இல்லை
என்பது தான்...

***

உன்னுடன் பேசுவதை
நிறுத்தி விட்டேன்
உனக்காக இப்பொழுது
காத்திருப்பதில்லை
உன்னிடமிருந்து எந்த
எதிர்பார்ப்புக்களும்
எனக்கில்லை. ஆனால்
உன் நினைவுகள் மட்டும்
முன்பை விட அதிகமாக
 என்னை வதைக்கிறது . 

***

அவனை பிரிந்து வாழ
பழகி கொள்கின்ற
சமயத்தில்
மீண்டும் வந்து
ஏக்கத்தை
உருவாக்கி விட்டு
சென்று விட்டான்... 

***

நான் என் மரணம்
பற்றி கவலை படுவதில்லை
ஆனால்
என் கவலை எல்லாம்
என் மரணத்திற்கு பிறகு
உனக்கு என் அளவு
அன்பு கொடுக்க
யாருமே இல்லை
என்பது தான்...

***

உன்னோடு பேசாமல்
என்னால் இயல்பாக
வாழ முடியவில்லை...
அதனால்தான்
தினமும் எனக்கு
நானே
பேசிக் கொள்கிறேன் உன்னுடன்
பேசுவதாக நினைத்து....!!!

***

என் உயிரானவளே
உனைப்போன்று
அன்பனவளைக்கண்டதில்லை
காண்பதற்கு ஆசை கொண்டதுமில்லை
உன் உண்மையான அன்பு தோற்றுப்போனதால்..

***

ஆயிரம் முறை
சண்டை போட்டிருப்பேன்
ஆனால்
ஒரு முறையேனும்
உன்னை தவிர்க்க
நினைத்ததும் இல்லை
தவிக்க விட்டதும் இல்லை.. 

***

நம்மை வேண்டாம்
என்று விட்டு சென்ற
உறவுகளை நாமும்
வேண்டாம் என்று விட்டு
விலகுவோம் ஆயின்
அதுதான் நம் வாழ்வில்
எடுக்கும் சிறந்த
முடிவாய் இருக்கும்
ஆனால் அது போன்ற
முடிவை யாராலும் எடுக்க
முடிவதில்லை..

***

பெண்ணே,
உன் பின்னால் அலைந்து
திரிந்த போதெல்லாம்
கத்தி சொன்னாய்
பிடிக்கல என்று..!
உன் கை கோர்த்து
ஒருவன் நடந்ததை
பார்த்த போது தான்
நான் உணர்ந்தேன்
நீ சொன்னது
வார்த்தை மட்டும் அல்ல
என் இதயத்தை
கிழிக்க வந்த
கத்தி என்று..!

***

எப்பொழுதும் என்னை வெறுக்கும் என்
அன்பு காதலியே...,
"நீ வேன்டாம் என்று சொன்னவுடன்
உன்னை விட்டு வேறு ஒருத்தியை பார்ப்பதற்க்கு நான்
செய்தது விபச்சாரம் அல்ல...

***

நீ என்னை விட்டு பிரிந்து
சென்றாலும்
உன்னோடு பேசிய வார்த்தைகளையும்
உன்னோடு செலவிட்ட நேரத்தையும்
உன்னோடு சேர்ந்து ரசித்த
பாடல்களையும்
இன்றுவரை என்னால் மறக்க
முடியவில்லை
உன்னால் மட்டும் எப்படிடா முடிந்தது 

***

மனதளவில் குறைந்தப்பட்சமேனும்
நல்லவனாய் இருக்கும் ஒருவனை, எந்த
சூழ்நிலையிலும் எந்த ஒரு
காரணத்திற்காகவும் பெண்
விட்டுவிலகுவதேயில்லை.....

***

அன்று ஆயிரம் சண்டைகள்
போட்டுக் கொண்ட போதும்
நானும் நீயும் பிரிய வில்லை.
இன்று சண்டைகளே இல்லை
ஆனாலும்
நீ என் அருகில் இல்லை.

***

பிரிவின்
வலிகளை
சொல்லவும்
முடியாது
புரியவைக்கவும்
முடியாது
தவித்துக்
கொண்டிருக்கும்
மனதிற்கு
மட்டுமே
அதன்
வேதனை
புரியும்
எத்தனை
ஆறுதல்
வார்த்தைகள்
கிடைத்தாலும்
அழியாமல்
இருக்கும் ...
அந்த வலிகள்.....

***

தலை சாயும்
இடத்திலெல்லாம்
உன் மடியைத்
தேடுகின்றேன் 

***

எந்த நம்பிக்கையில்
நீ எனக்கு கிடைக்க
போவதில்லை என்று
உறுதியான பிறகும்
உன்னை காதலிக்கிறேன்
என்று தெரியவில்லையடா.

***

எல்லா ஆண்களுக்கும்
கிடைத்து விடுவதில்லை
தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு
ஒரு பெண்ணின்
உண்மையான ""அன்பு""...!!!

***

என்
கண்களில்
இருந்து வழியும்
ஒவ்வொரு
கண்ணீர்
துளிகளும்
நீ தந்த வலிகளின்
வெளிப்பாடு..

***

உண்மை காதலை
உன் காதலில்
உணர்ந்தேன்
பிரிவின் வலியை
உன்னை பிரிந்த_பின்
அனுபவிக்கிறேன்..

***

நேரங்கள்
செல்வது
தெரியாமல்
சிந்தித்துக்
கொண்டிருக்கின்றேன்
உன்னைப்
பற்றிய
ஒவ்வொரு
எண்ணங்களும்...

***

என்னை பிடிக்கவில்லை
என்று தான் பிரிந்து சென்றாய்
என்று நினைத்தேன்
ஆனால்
இப்பொழுதுதான் புரிகிறது
பிடித்ததால் தான்
பிரிந்து சென்றாய் என்று
என்னை அல்ல
இன்னொரு பெண்ணை

***

ஒருவருடைய கண்களில் இருந்து
கண்ணீர் வரும்போது
இன்னொருவருடைய கண்களில்
இருந்து கண்ணீர்வந்தால்
அந்த உறவைவிட இந்த உலகத்தில்
பெரிய உறவுஇல்லை!!!

***

விலகிச் செல்லும் போது தான்
மறைத்து வைத்த காதல் யாவும்
உயிரை சாகடித்து வெளிப்படுத்துகி
றது....

***

செய்திருக்க மாட்டேன் என
தெரிந்தும்
சில தவறுகளைச் சொல்லி
சண்டையிடுவான்
நானும் ஏற்றுக்கொள்வேன்...
அவனுக்குத் தேவை
சமாதானம் எனும் பெயரில்
சில கொஞ்சல்கள் ...!

***

உலகத்துலேயே
ரொம்ப
கொடுமையான
விஷயம்
எது தெரியுமா ?
நமக்கு பிடிச்சவங்க நம்மள விட்டு
போறது தான் ..
அதுவும் லவ் பண்ணவங்க
"நீ வேணாம்
,என்னை மறந்துடு,
இனி நீ யாரோ நா யாரோ " நு
சொல்லிட்டு போறத
பார்த்துட்டு கண்ணீர்
விட்டுகிட்டு நிப்போம் பாருங்க...
அந்த
ஒருநிமிஷம் மனசுல ஏற்படுற வலி
இருக்கே... அது சாவ விட
மோசமானது ...
இந்த
உலகத்துலேயே
, காதல்
மாதிரி சந்தோஷம் தாறது எதுவும்
கிடையாது .. வேதனைய
தாறது எதுவும் கிடையாது...!

***

உன்னை பின் தொடரும் உரிமை
என்னை தவிர யாருக்கும் கிடையாது
சொல்லி வை உன் நிழலிடம்...

***

சிறந்த கணவனானவன்,

தன் மனைவி முன் மற்றப்பெண்களுடன்
பழகி அவள் மற்றப்பெண்கள் மேல்
பொறாமை கொள்ளும் படி செய்பவன்
அல்ல...!
தன் மனைவியை தாங்கும்
விதத்திலேயே மற்றப்பெண்களையெ
ல்லாம் தன் மனைவி மேல் பொறாமை
கொள்ளச் செய்பவன் ''இப்படி ஒரு
கணவனை பெற்றுவிட்டாளே...''
என்று...!!!

***

மனதைக்
கொன்ற
நீயும்
ஒரு
கொலைகாரன் தான்
அதனால் தான்
சிறை
வைத்துள்ளேன்
உன்னை
என்
இதயத்தில்...

***

ஒரு பெண்ணை உண்மையாக
நேசிக்கும்
ஒருவனால் ....
அவளை அடுத்த ஆண்களுடன்
சேர்த்து பேச முடியாது ..
எந்த சந்தர்ப்பங்களிலும் ..

***

பொழுது போக்குக்காக
உன்னை காதல் செய்யவில்லை...
என் பொழுதெல்லாம்
நீ வேண்டும் என்பதற்காக
காதல் செய்தேன்

***

ஒருவரை மனம் நோகும்படி
பேசிவிட்டு,
மன்னிப்பு சொல்றது
செருப்பால் அடித்துவிட்டு
காலில் விழுவதற்கு சமம்..

***

சுற்றி இருக்கும் அத்தனை
சொந்தங்களும் சரியாக அமையா
விட்டாலும்..வாழ்க்கைத் துணை
என்னும் ஒரு சொந்தம் சரியாக
அமைந்து விட்டால்..எந்த ஒரு
ஆணும் பெண்ணும் இந்த
உலகையே வெல்லலாம்....!!

***

நமக்குள் ஆயிரம் சண்டைகள்
வந்தாலும்
மனம் உன்னை விட்டு பிரிய
மறுக்கிறது..
எத்தனை முறை சண்டைகள்
வந்தாலும்
இறுதியில் நமக்குள் இருக்கும் அன்பு
அதிகமாய் தான் வெளிப்படுகிறது..
உன் தோள் சாய்ந்து என்றும்
உன்னுடன் இருப்பேன்...!!

***

சிலர் என்னை நிராகரிக்க
தொடங்கும் முன்பே !
நான் விலகத் தொடங்கிவிட்டேன்

***

என் இதயத்தை எட்டிப்பார்
நீ தந்த காயங்களால்
எப்படி சிதைந்துள்ளது என்று
சில வேளை நீ பார்க்கும் போது
அதுகூட
நடிக்கலாம் .
தனக்கு வலியில்லாததுபோல 
உனக்கு வலிக்காக்கூடாதே என்பதற்காக

***

ஊசியாய்த் துளைகாதே மனதை..
உதிரத்தில் காற்றாய் கலந்திருப்பது
உன் காதல் தான்

***

இரவில் சண்டையிட்டு காலையில்
ஒன்றும்
நடக்காதது போல்
நீ பேசும் அழகில் ஒளிந்திருக்கிறது
நம் காதல் !

***

புன்னகையோ கண்ணீரோ
எதுவானாலும் பத்திரப்
படுத்துவேன் கொடுப்பது
நீ என்பதால் !

***

தாக்க வேண்டிய
கை, தாங்கும் போது
ஏற்படும் இனிமையை
விட,
தாங்க வேண்டிய
கை தாக்கும் போது
ஏற்படும் வலியே
அதிகம்...!!!!

***

கொடுமையிலும் கொடுமை
ரொம்ப அன்புவைத்தவர்கள்
ஒதுக்குறது தான். .
வேதனையிலும் மரண வேதனை
அவர்களின் வேதனை தரும் வார்த்தைகள்
தான்.

***

பேசும் வார்த்தையை விட பேசாத
மெளனத்திற்கு
அதிகம் அர்த்தம் உண்டு
பேசும் வார்த்தைகள் எல்லோருக்கும்
புரியும் ஆனால் மெளனம் உன்னை
நேசிப்பவர்களுக்கு மட்டும்தான்
புரியும்..!!!

***

என்றேனும்,
வாழ்வின்
ஏதேனும்
ஒரு நொடி
உனக்கு
உணர்த்தும்,
நீ என்னுடன்
இருந்த நிமிடங்களையும்,
நான் உன்னை
இழந்து தவித்த
நிமிடங்களையும்....!!

***

நமக்கு நெருக்கமானோர்
நம்முடன் பேசாத போது ஏற்படும்
வலியை விட அவர்கள் மற்றவருடன்
நெருக்காமாக பேசும் போது
ஏற்படும் வலி அதிகம்...!




No comments:

Post a Comment