கவிதையே நீ தான்


சிசுவென உன்னுள் சிடுசிடுவென கருவாய் வளர்ந்து,


நெடுநாளாய் நீ கண் மூடாமல் அடிமேல் அடிவைத்து   அணு அணுவாய் என்னை நினைத்து,

பொற்குடமான உன் கருவறையில் பொக்கிஷமாய் காத்து,


பொற்குடமான உன் கருவறையில் உறங்க நீ இருட்டறையில் விழித்தாய்,

நீ சுமந்த வலியை கடவுளே நேரில் வந்தாலும் தாங்க மாட்டான்,

கருவாய் சுமந்து உருவாய் மாற்றி என்னை காத்தவளே அம்மா என் கவிதையே நீ தான்.


No comments:

Post a Comment