என்னை எழுத வைப்பது நீ தானே


நீ....
ரொம்ப அருமையாக
காதல் கவிதை
எழுதுகிறாய் என்று
எல்லோரும்
என்னை பாராட்டும் போதெல்லாம்....

நான்
குற்ற உணர்வில்
கூனிக் குறுகிப் போகிறேன்....

பெண்ணே!
உண்மையில்
அந்தப் பாராட்டுகள் எல்லாம்
உனக்குத்தான்
சொந்தமானது...

ஆம்....!
எழுதுவது
"நான் தான் " என்றாலும்...
என்னை
எழுத வைப்பது
" நீ தானே...!"

          

No comments:

Post a Comment