விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுள் ஒருவர். "கப்பலோட்டிய தமிழன்", "செக்கிழுத்த செம்மல்" என்றெல்லாம் விளங்கும் வ. உ. சிதம்பரம் பிள்ளை, நெல்லைமாவட்டத்தில் தோன்றியவர் இவர்; நாட்டுவிடுதலைக்காகப் பாடுபட்டு நலிவுற்றவர். செக்கிழுத்த செம்மல். நாட்டுமுன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, இலக்கிய இலக்கணவளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். சிறந்தபதிப்பாசிரியர் திருக்குறள் மணக்குடவருரை, தொல்- இளம்பூரணர்மேலைநாட்டுத் தத்துவப் பேரறிஞராய் விளங்கிய ஜேம்ஸ்ஆலென்எழுதியநூல்களுக்குத் தமிழாக்கம் செய்தவர்.
தமிழ் நாட்டில் உள்ளதிருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும்ஊரில்உலகநாதன் பிள்ளை- பார்வதி அம்மைஎன்பவர்களுக்கு மூத்தமகனாகஇவர்பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று1895-ல்வழக்கறிஞரானார்.
உரிமையியல், குற்றவியல் ஆகியஇரண்டுசட்டத்துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள்குவித்தார்.தமிழாராய்ச்சி, தத்துவஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம்கொண்டிருந்தார். விவேகபானு என்கிறமாதஇதழைநடத்திவந்தார். சைவசித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்மசங்கம்போன்றசங்கங்களில் உறுப்பினராகித் தன்அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவுதேடினார்.
சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலைஓங்கச்செய்தது. அதன்பிறகே அவர்வாழ்வில் புதுஅத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவிசுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தேமாதரமுழக்கங்களைத் துணிகளில் எழுதச்செய்துவீதிகள் தோறும்வீடுகள் தோறும்தேசியஉணர்வைவளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்தியசுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.
கப்பலோட்டிய தமிழன்
ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான்வளர்ந்தது என்கிறஅடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல்கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு"சுதேசிநாவாய்ச் சங்கம்" என்கிறசங்கத்தை நிறுவிஅதன்செயலாளர் ஆனார். (அதன்தலைவர்மதுரைதமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல்பாண்டித்துரைதேவர்; சட்டஆலோசகர் சேலம்சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக்கம்பெனியின் சார்பில் காலியா, லாவோஆகியஇரண்டுகப்பல்களை வாங்கிதூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால்கப்பலோட்டிய தமிழன்என்றுஅனைவராலும் அழைக்கப்பட்டார்.
ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான்வளர்ந்தது என்கிறஅடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல்கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு"சுதேசிநாவாய்ச் சங்கம்" என்கிறசங்கத்தை நிறுவிஅதன்செயலாளர் ஆனார். (அதன்தலைவர்மதுரைதமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல்பாண்டித்துரைதேவர்; சட்டஆலோசகர் சேலம்சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக்கம்பெனியின் சார்பில் காலியா, லாவோஆகியஇரண்டுகப்பல்களை வாங்கிதூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால்கப்பலோட்டிய தமிழன்என்றுஅனைவராலும் அழைக்கப்பட்டார்.
செக்கிழுத்த செம்மல்
தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம்ஆண்டுமார்ச்9-ஆம்நாள்விபின்சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போதுஅரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவுசெய்து, இவருக்கு இரட்டைஆயுள்தண்டனைகொடுத்தது. (அரசநிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லாசெஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத்தீர்ப்பினை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போதுஅந்தமான் அனுப்பஇயலாதுஎன்பதால் கோவைச்சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கேதான்செக்கிழுக்க வைக்கப்பட்டார். செக்கிழுத்த செம்மல் என்றபெயரும் இவருக்கு உண்டு. சென்னைஉயர்நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன்பிரிவியூ கவுன்ஸில், ஆறுஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.
தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம்ஆண்டுமார்ச்9-ஆம்நாள்விபின்சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போதுஅரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவுசெய்து, இவருக்கு இரட்டைஆயுள்தண்டனைகொடுத்தது. (அரசநிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லாசெஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத்தீர்ப்பினை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போதுஅந்தமான் அனுப்பஇயலாதுஎன்பதால் கோவைச்சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கேதான்செக்கிழுக்க வைக்கப்பட்டார். செக்கிழுத்த செம்மல் என்றபெயரும் இவருக்கு உண்டு. சென்னைஉயர்நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன்பிரிவியூ கவுன்ஸில், ஆறுஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.
"சிரெல்லாம் நிறைந்து விளங்கும் செந்தமிழ் நூல்களிற் சிறந்தது, "திருக்குறள்" என்று வழங்கும் வள்ளுவர் நூல்.
"தருமர், மணக்குடவர், .தாமத்தர். நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்கெல்லைஉரை யெழுதினோர். " அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சிலவருடங்களுக்கு முன்னர் யான்படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது மற்றையஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவாஎனக்குஉண்டாயிற்று. அதுமுதல் தமிழ்நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன். அம்
முயற்சியின் பயனாகஎனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதிஒன்று.
- "கப்பலோட்டிய தமிழ" னின்(மணக்குடவருரை)
"தருமர், மணக்குடவர், .தாமத்தர். நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்கெல்லைஉரை யெழுதினோர். " அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சிலவருடங்களுக்கு முன்னர் யான்படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது மற்றையஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவாஎனக்குஉண்டாயிற்று. அதுமுதல் தமிழ்நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன். அம்
முயற்சியின் பயனாகஎனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதிஒன்று.
- "கப்பலோட்டிய தமிழ" னின்(மணக்குடவருரை)
No comments:
Post a Comment