புதுவைக் கவியானபாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு, ஆகியமொழிகளில் புலமைபெற்றுவிளங்கியவர். புதுவைஅரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராப் பணியாற்றியவர். புரட்சிக் கனல்தெறிக்கும் இவர்பாடல்கள், தமிழர்வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பன. குடும்ப விளக்கு, குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசுமுதலானபலகவிதைநூல்களை இவர்படைத்துள்ளார்.
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரியவணிகராயிருந்த கனகசபைமுதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர்சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநிஅம்மையார் என்பாரை மணந்துகொண்டார். இவர்சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப்பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்றகாலமேகூடியது. தமதுபதினாறாம் வயதிலியே கல்வேகல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வுகருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப்பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின்சிறப்புணர்ந்த அரசியலார் அவரைஅரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சிஅளிக்கத் தலைப்பட்டன. சிறுவயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமதுதோழர்கட்குப் பாடிக்காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின்பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால்கவிஞருக்கு அதுதெரியாது. அப்பாடலேஅவரைபாரதியாருக்கு அறிமுகம் செய்துவைத்தது. தன்நண்பர்கள் முன்னால் பாடுஎன்றுகூறஎமதுகவிஞர்"எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டுபாடலைபாடினார். இவரின்முதற்பாடல்பாரதியாராலேயே சிறீசுப்பிரமணிய கவிதாமண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ்ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் எனபலபுனைபெயர்களில் எழுதிவந்தார். பிரபலஎழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும்கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னைஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம்ஆண்டுதேர்நதெடுக்கப்பட்டார்.
1946 ஜூலை29 இல்அறிஞர்அண்ணாஅவர்களால் கவிஞர்'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடகநூலுக்கு 1970 இல்சாகித்ய அகாதமியின் விருதுகிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல்பொதுஉடமையாக்கப்பட்டது.
கவிஞர் 21.4.64ல் இயற்கைஎய்தினார். மலர்மன்னன் என்றமகனும்மூன்றுபெண்குழந்தைகளும் உள்ளனர்.
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?மகராசர்கள் உலகாளுதல்
நிலையாமெனும் நினைவா?உலகாளஉனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்!உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!
- பாரதிதாசன்
வதையேபுரி குவதா?மகராசர்கள் உலகாளுதல்
நிலையாமெனும் நினைவா?உலகாளஉனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்!உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!
- பாரதிதாசன்
No comments:
Post a Comment