காக்கைச் சிறகினிலே நந்த லாலா

காக்கைச் சிறகினிலே நந்த லாலா!

நின்தன் கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!

பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!

நின்தன் பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!

கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!

நின்தன் கீத மிசக்குதடா நந்த லாலா!

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!

நின்னைத் தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!”

No comments:

Post a Comment