கிளிமாஞ்சாரோ - எந்திரன்


படம்:  எந்திரன்
இசை:  .ஆர்.ரகுமான்
பாடியோர் :    ஷாவித் அலி, சின்மயி

பல்லவி

ஆண் :    கிளிமாஞ்சாரோ மலைக்
        கனிமாஞ்சாறோ   கன்னக்
        குழிமாஞ்சாரோ யாரோ யாரோ
குழு :    ஆகாஆகா  ஆகாஆகா

ஆண் :    மொகஞ்சதாரோ   உன்னில்
        நொழஞ்சதாரோ பைய்ய
        கொழஞ்சதாரோ     யாரோ யாரோ
குழு :    ஆகாஆகா  ஆகாஆகா

பெண் :    காட்டுவாசி காட்டுவாசி
        பச்சையாக கடிய்யா
        முத்தத்தால வேகவச்சு
        சிங்கப்பல்லில் உறிய்யா..
குழு :    ஆகாஆகா  ஆகாஆகா

பெண்:  மலைப்பாம்பு போலவந்து
        மாங்குட்டியப் புடிய்யா
        சுக்குமிளகு தட்டியயன்ன
        சூப்புவச்சுக் குடிய்யா.,
குழு :    ஆகாஆகா  ஆகாஆகா

ஆண்  :    ஏவாளுக்குத் தங்கச்சியே
        யேங்கூடத்தான் இருக்கா
        ஆளுயர ஆலிவ் பழம்
        அப்படியே எனக்கா

        அக்கக்கோ அடி கின்னிக்கோழி
        அப்பப்போ யயன்னபின்னிக்கோடி
        இப்பப்போ முத்தம்     எண்ணிக்கோடி!

சரணம்  1

ஆண் :    கொடிப்பச்சையே
        எலுமிச்சையே
        உன்மேல் உன்மேல்
        உயிர் இச்சையே!

பெண் :    அட நூறுகோடி தசை
        ஒவ்வொன்றிலும்
        உந்தன் பேரே இசை!

ஆண் :    இனிச்சக்கீரே
        அடிச்சக்கரே
        மனச ரெண்டா
        மடிச்சுக்கிரே

பெண்:    நான் ஊற வைத்தக் கனி
        என்னைமெல்ல
        ஆற வைத்துக் கடி!

ஆண் :    வேர்வரை நுழையும்
        வெயிலும் நான்நீ
        இலைத்திரை ஏன் இட்டாய்?

பெண் :    உத ட்டையும் உதட்டையும்
        பூட்டிக்கொண்டுஒரு
        யுகம் முடித்து திற அன்பா!

சரணம்  2

பெண் :    சுனைவாசியே
        சுகவாசியே
        தோல் கருவி
        எனைவாசியே!

ஆண் :    நீ தோல் குத்தாத பலா
        றெக்கைக்கட்டி
        கால்கொண்டாடும் நிலா!

பெண் :    மரதேகம் நான்
        மரங்கொத்தி நீ
        வனதேசம் நான்
        அதில் வாசம் நீ!

ஆண் :    நூறு கிராம்தான் இடை     
        உனக்கு இனி
        யாரு நான்தான் உடை!

பெண் :    ஐந்தடி வளர்ந்த
        ஆட்டுச்செடி என்னை
        மேய்ந்துவிடு மொத்தம்

ஆண் :    பச்சைப் பசும்புல்
        நீயானால் புலி

        புல்தின்னுமே என்ன குத்தம்

No comments:

Post a Comment