இருமல்


1. இருமல்


அறிகுறிகள்:
இருமல்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம்.
சர்க்கரை.

செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையை கலந்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


2. வறட்டு இருமல்

அறிகுறிகள்:
வறட்டு இருமல்.

தேவையான பொருட்கள்:
கிராம்பு பொடி.
பனங்கற்கண்டு.
பால்.

செய்முறை:
கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.


3.இருமல்

அறிகுறிகள்:
இருமல்.

தேவையான பொருட்கள்:
வேலிப்பருத்திச் சாறு.
துளசிச் சாறு.
பசு வெண்ணெய்.
கருஞ்சீரகம்.

செய்முறை:
வேலிப் பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


4. இருமல்

அறிகுறிகள்:
தொடர்ந்து  இருமல் காணப்படும்.

தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி இலை.
ஏலக்காய்.
வெந்தயம்.
வெங்காயம்.

செய்முறை:
மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


5. இருமல்

அறிகுறிகள்:
இருமல்.
சளி.

தேவையான பொருட்கள்:
இண்டு வேர்
தூதுவளை வேர்.
சுக்கு.
திப்பிலி.

செய்முறை
இண்டு வேர், தூதுவளை வேர், சுக்கு, திப்பிலி, வெந்தயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு  சுண்டக்காய்ச்சி தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

No comments:

Post a Comment